விஜயகாந்தின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் ராமானுஜபுரம் ஆகும். அதனால் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் விருதுநகர் பகுதியில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் துணிந்து வேட்பாளராக களமிறங்குகின்றார். விஜயகாந்த் மறைவால் நிலவும் அனுதாபா அலை அவரை வெற்றி பெற செய்யும் என்று தேமுதிக நம்புகிறது. ஆனால் மற்றொரு பக்கம் விஜய பிரபாகரன் இன்னும் பக்குவம் இல்லாமல் பேசுகிறார் என்ற கருத்தும் நிலவுகிறது.