எத்தனை பொய்களை தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவம் இல்லையா? என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடியை மத்திய பாஜக அரசு அள்ளிக் கொடுத்ததாம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1960 கோடி, சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என தமிழக மக்கள் காதில் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு என்று சரமாரியாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது அவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.