நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையில் பணிபுரிந்து வரும் 8 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் நாமக்கல் தாலுகா குடிமைபொருள் வழங்கல் தாசில்தார் சுரேஷ் இடமாறுதல் செய்யப்பட்டு ராசிபுரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்செங்கோடு உதவி கலெக்டர் நேர்முக உதவியாளர் தங்கம் குமாரபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த சின்னத்தம்பி நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன் இடம் மாறுதல் செய்யப்பட்டு, திருச்செங்கோடு உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சேந்தமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட அணி தாசில்தார் பச்சை முத்து இடமாறுதல் செய்யப்பட்டு திருச்செங்கோடு தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த அப்பன் ராஜ் சேந்தமங்கலம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தமிழ்மணி இடமாறுதல் செய்யப்பட்டு நாமக்கல் அரசு கேபிள் டிவி தமிழ் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் நாமக்கல் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மாதேஸ்வரி நாமக்கல் சமூக பாதுகாப்பு திட்ட கடல் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் ஆதி திராவிடர் நலத்துறை தனிதாசுதாரர் பொறுப்பை மணிகண்டன் கூடுதலாக கவனிப்பார் எனவும் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்