ஜப்பான் தலைநகரான டோக்கியோவை சேர்ந்த ஹிரோகோ ஹட்டகமி எனும் பெண் அவசர அழைப்பு எண்ணை 2761 முறை அழைத்துள்ளார். ஒவ்வொரு முறையும் வயிற்று வலி  என்றும் அதிக அளவு போதை மருந்து உட்கொண்டதாகவும் கால் வலி என்றும் வெவ்வேறு காரணங்களை கூறி அவசர அழைப்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அது அனைத்துமே பொய்யான காரணங்கள்.

இது குறித்து அவரிடம் விசாரித்த போது தான் தனியாக இருப்பதாகவும் தான் கூறுவதை யாராவது கேட்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். 2020 ஆம் ஆண்டு முதல் 2023 மே வரை சுமார் மூன்று வருடங்கள் இதுபோன்று பொய்யான காரணங்களை கூறி அவசர அழைப்பு எண்ணை இந்த பெண் தொடர்பு கொண்டு உள்ளார். இதை தொடர்ந்து காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.