கடந்த சில தினங்களுக்கு முன்பாக 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக பிரான்ஸ் நாடு முழுவதும் கலவர பூமியாக மாறி இருந்தது. இந்த சூழலில் அதிபர் இமானுவேல் மெக்ரானின் எலிசி மாளிகைக்கு பார்சல் ஒன்று வந்துள்ளது அதை பிரித்து பார்த்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலின் உள்ளே வெட்டப்பட்ட மனித கைவிரல் இருந்துள்ளது.

இதனை உறுதி செய்த காவல்துறையினர் இது மக்களால் விடுக்கப்படும் மிரட்டல் என கூறியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் துண்டிக்கப்பட்ட கைவிரல் பார்சலை அனுப்பியவருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் கலவரம் ஓய்ந்த நிலையில் இந்த பார்சல் விவகாரம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.