நடிகர் விஜய் தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நீலாங்கரையில் வைத்து ஊக்க தொகையை வழங்கினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய அவர் ஓட்டிற்கு பணம் வாங்க கூடாது என்றும் நம் விரலை வைத்து நம் கண்ணை குத்தி விடுவார்கள் என்றும் பேசி இருந்தார். மேலும் தான் அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக பேசிய நிலையில் விஜய் சீக்கிரம் அரசியலுக்கு வருவார் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது

இந்நிலையில் நடிகர் விஜய்யோடு சேர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகளை காலி செய்வேன் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரையில் பேசிய அவர், விஜய் அரசியலுக்கு வருவதால், திமுக அதிமுகவிற்கு ஆபத்து இல்லை; எனக்கு தான் ஆபத்து என புரளி கிளப்பி விடுகின்றனர். நானும், தம்பி விஜய்யும் ஒருபோதும் அடித்துக் கொண்டதில்லை. 2024 தேர்தலில், நாம் தமிழர் கட்சி 40 இடங்களில் தனித்து போட்டியிடும்’ என்றார்.