நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டபாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு பாதுகாப்பு பணிகள்  தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சுதந்திர தினத்தன்று டெல்லியில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பு நலனை கருதி நாடு முழுவதும் இருந்து ரயில் மூலமாக டெல்லிக்கு பார்சல் அனுப்பும் வசதி வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் பிற ஊர்களுக்கு ரயில் வழியாக செல்லும் பார்சல்கள் அனைத்தும் ஆர்பிஐ போலீசார் உதவியுடன் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு பரிசோதித்து பிறகு அனுப்பப்படுகிறது.