இந்தியாவில் சமீப காலமாகவே, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் மற்றும் செல்பி மோகம் இளைஞர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது.  இதனால் பலரும் உயிரை விட்டு வருகிறார்கள். ஒருசில அசம்பாவிதங்களால் இறந்துபோவதும், கொலை போன்ற சம்பவங்கள் நடப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

அந்தவகையில் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிட்ட மனைவியை கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் – பூஜா தம்பதி. பூஜா ரீல்ஸ், ஷார்ட் பதிவிடுவது என சமூக வலைதளங்களில் அதிக நாட்டம் காட்டி வந்துள்ளார். இதனால், ஸ்ரீநாத் மனைவிக்கு வேறு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து தகராறில் ஈடுபட்டவர், ஆத்திரத்தில் பூஜாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.