நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை மத நோக்கங்களுக்காக யாரும் பயன்படுத்தக் கூடாது. தேசியக்கொடியை அலங்காரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. தேசியக்கொடியை மேஜை துணியாகவோ, கைக்குட்டையாகவோ அல்லது தூக்கி எறியும் பொருளாகவோ பயன்படுத்தக் கூடாது.

முடிந்தவரை சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை பறக்க விட வேண்டும். கொடியை தரையில் வைக்க கூடாது. கால்களுக்கு கீழே போட்டு மிதிக்க கூடாது. தேசியக்கொடியை விட வேறு எந்த கொடியும் உயரத்தில் பறக்க கூடாது. கொடியில் மலர்கள் மற்றும் பூ கொத்துகள் பிறப்பொருள்கள் எதையும் வைக்கக்கூடாது.