இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் இதுவரை 15 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் சென்னை பெங்களூரு, சென்னை, கோவை, சென்னை, நெல்லை உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், இதுவரை பகல் நேரங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் இன்று முதல் இரவு நேரங்களிலும் இயக்கப்பட உள்ளது. இன்று இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருவுக்கு முதல் இரவு நேர வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.