மத்திய மாநில அரசுகள் பெண்களுடைய நலனை கருத்தில் கொண்டு தொழில் தொடங்க கடனுதவி அளித்து வருகிறது. அந்தவகையில் 5 ஏப்ரல் 2016 அன்று, பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களை தொழில்முனைவோராகப் பயிற்றுவிப்பதற்கான ‘ஸ்டாண்ட்டப் இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை, கடனை ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் சரியான நபர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்தக் கடனைப் பெற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தகுதியானவர்கள். இது குறித்து கூடுதல் விவரங்களை அறிந்து, https://www.standupmitra.in/ மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.