எல்லை பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள பஞ்சாப் மாநிலத்தின் கிராமத்தில் இருந்த வயல்வெளியில் பஞ்சாப் காவல்துறையினருடன் இணைந்து சோதனை மேற்கொண்ட போது ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படையினர் தங்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எட்டு பாகிஸ்தானிய ட்ரோன் கள் போதைப்பொருள் கடத்துவதற்காக இந்தியாவுக்குள் வந்துள்ளது. இதிலிருந்து 5 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிற்குள் வந்த எட்டு ட்ரோன்களுமே சீனாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளது.