தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் நாளை அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் என எதுவும் இயங்காது. அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் இனி திங்கட்கிழமை தான் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும்.