நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்திலும் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளும் ஜூன் 12ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில சிபிஎஸ்சி பள்ளிகளில் மூத்த வகுப்புகளுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மற்ற வகுப்பினருக்கு ஜூன் 10 முதல் ஜூன் 15ஆம் தேதிகளுக்கு இடையே பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு மாற்றங்களின் படி பள்ளி ஆசிரியர்களுக்கு அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.