தெற்கு ரயில்வே நிர்வாகம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை எழும்பூர் மற்றும் கோயம்புத்தூர், தாம்பரம் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே சிறப்பு ரயில் சேவைகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று (ஏப்ரல் 18) மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.30 மணிக்கு குமரியை சென்றடையும்.

இதேபோன்று மறு மார்க்கத்தில் ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் குமரியிலிருந்து இரவு 8:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இதேபோன்று சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மாலை 4:25 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8:20 மணிக்கு கோவையை சென்றடையும். மேலும் இதேப்போன்று மறு மார்க்கத்தில் ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இரவு 8:40 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 10.5 மணிக்கு எழும்பூரை சென்றடையும்.