ஒரே உணவு, ஒரே மொழி, ஒரே மதம் என ‘ஒரே’யடியாக இந்தியாவை அழிக்கத் திட்டம்போடும் நாசகார சக்தியான பா.ஜ.க வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூரில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் அவரால் கைப்பற்றவே முடியாத திராவிட எஃகுக் கோட்டையாகவே தமிழ்நாடு என்றும் இருக்கும்.

இந்த இரண்டாவது விடுதலைப் போரில், எதிரிகளோடு, அவர்களுக்குத் துணைபோகும் கட்சிகளையும், தமிழ்நாட்டை வஞ்சித்த அ.தி.மு.க.வையும் சேர்த்து விரட்டியடிப்போம் என பேசினார்.