நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் சொந்த ஊர் செல்லும் மக்கள் அனைவரும் திரும்ப ஏதுவாக நவம்பர் 13 திங்கட்கிழமை பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நவம்பர் 13ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை விடுமுறையை நவம்பர் 13ஆம் தேதியாக மாற்றி ஆந்திரா அரசு அறிவித்துள்ளது. இதனால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.