‘பாரத் ஆட்டா’ என்னும் மானிய விலை கோதுமை மாவு விற்பனையை நேற்று மத்திய உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கி வைத்தார். முதல் கட்டமாக 100 நடமாடும் விற்பனை மையங்களைத் தொடங்கி வைத்தார். விலையேற்றம் காரணமாக இந்திய சந்தைகளில் கோதுமை பற்றாக்குறை நிலவுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு மானிய விலையிலான கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கு ‘பாரத் ஆட்டா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மானிய விலையில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.27.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும். தனியார் நிறுவன கோதுமை மாவு ரூ.45, 50, 65 என்ற விலைகளில் கிடைக்கிறது.