சீனாவில் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் புதிய பரிமாணம் ஏற்படுத்தும் வகையில், ஒரு மனித உருவ ரோபோ உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்து அதிகாரப்பூர்வமாக டிப்ளோமா பெற்றுள்ளது. இது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
பட்டமளிப்பு விழாவில் மேடையில் சென்று டிப்ளோமா வாங்கும் இந்த ரோபோவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ये वायरल वीडियो चीन की है जहां छात्र ने कॉलेज डिग्री लेने के अपनी जगह रोबोट को भेज दिया।
जिसे उसने कॉलेज के दौरान प्रोजेक्ट के तौर पर बनाया था।
उनके बच्चे रोबोटिक्स और AI के क्षेत्र में झंडे गाड़ रहे हैं तो हमारे युवा धर्म बचाने में लगे हैं। pic.twitter.com/XQZwXi38MM
— Dr. Sheetal yadav (@Sheetal2242) July 21, 2025
இந்த ரோபோ சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (Machine Learning) தொழில்நுட்பங்களை கொண்டு, மனித மாணவர்களைப் போலவே வகுப்புகளில் கலந்து கொண்டு, வீட்டுப்பாடங்கள், திட்டங்கள் மற்றும் தேர்வுகளில் பங்கேற்று உயர் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளது.
இதன் திறமையை மதித்து பள்ளி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக டிப்ளோமா வழங்கியுள்ளது. இது உலகிலேயே முதன்முறையாக பள்ளி படிப்பை முடித்து டிப்ளோமா பெற்ற ரோபோவாகும். இந்த சம்பவம் சீனாவிலும், உலக நாடுகளிலும் பெரும் கல்வி விவாதத்துக்கு துவக்கமாக அமைந்துள்ளது.
இது தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு புதிய கட்டமாக பார்க்கப்படுவதுடன், மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்கள் படிப்பது, அவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுவது போன்ற கேள்விகளை உருவாக்கி உள்ளது. பலரும் இதனை எதிர்காலத்தின் கல்வி மாற்றத்தின் சின்னமாக பார்ப்பதோடு, சிலர் மனித மாணவர்களின் எதிர்காலத்துக்கு இது ஒரு சவாலாக இருக்கும் என கவலை தெரிவிக்கின்றனர். AI வளர்ச்சியால் உருவாகும் மாற்றங்களை எதிர்கொள்ள கல்வி துறை தயாராக இருக்க வேண்டிய நேரம் இது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
