தமிழ் சினிமாவின் முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மயில்சாமி. இவர் நேற்று மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய உடல் இன்று தகனம் செய்யப்பட இருக்கும் நிலையில் நடிகர் மயில்சாமிக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் மயில்சாமி சென்னை எடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்ற நிலையில் ட்ரம்ஸ் மணியுடன் பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.

அதன் பிறகு அதிகாலை 3.30 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிய மயில்சாமிக்கு 4 மணி அளவில் பசி எடுத்துள்ளது. அப்போது மயில்சாமி இட்லி சாப்பிட்ட நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினர் மயில்சாமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். நடிகர் மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பிறகு  நடிகர் மயில்சாமியின் உடல் சென்னை ஏவிஎம் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.

நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள்.‌ இந்நிலையில் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் தன்னுடைய நண்பர் மயில்சாமியை பிரிய மனமில்லாமல் இறுதி ஊர்வல வண்டியில் மயில்சாமியின் தலை அருகே கன்னத்தில் கை வைத்தபடி சோகத்தின் உருவாய் உட்காரந்திருந்தார். இது பார்ப்போரின் கண்களை கலங்க வைத்தது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.