பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சனோன். இவர் தற்போது நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ஆதிபுருஷ் என்ற ராமாயண காப்பிய படத்தில் சீதையாக நடித்து வருகிறார். நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை கீர்த்தி சனோன் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் காதல் பற்றிய வதந்திகளுக்கு இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகை கீர்த்தி சனோன் சமீபத்திய பேட்டியில் தன்னம்பிக்கை குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, நான் சினிமாவில் நுழைந்த ஆரம்ப கட்டத்தில் ஒரு நடிகையாக என்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் அழுத காலங்கள் இருக்கிறது.

நாம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மற்றவர்களுடன் நேரத்தை கழிக்காமல் நம்மோடு நாமே நேரத்தை கழிப்பது தான் அதிகம். எனவே நம் மீது நாம் அன்பு செலுத்துவதோடு நம்பிக்கையும் வைத்திருக்க வேண்டும். ஒரு படம் ரிலீஸ் ஆகும்போது குண்டாக இருக்கிறீர்கள், இன்னும் கூட நன்றாக நடித்திருக்கலாம் என எத்தனையோ விமர்சனங்களை நம் மீது நாமே வைத்துக் கொள்கிறோம். இதனால் தேவையில்லாத நெருக்கடி, கவலை மற்றும் தன்னம்பிக்கையை இழந்து விடுதல் போன்றவைகள் நடக்கும். எனவே நம் மீது நாம் நம்பிக்கை வைத்தால் மட்டுமே தன்னம்பிக்கையோடு வாழ முடியும் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை கீர்த்தி சனோனின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.