நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் கீழம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பாக சீமானுக்கு சென்னை காவல்துறை சமன் அனுப்பியுள்ள நிலையில் தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக கூறி நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்சியின விஜயலட்சுமி மீது புகார் அளித்துள்ளனர்.