சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, 2016-ம் ஆண்டு அக்.20-ம் தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் விற்பனை செய்யப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மனைகளை வரன்முறை செய்துகொள்ள கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 2016 அக். 10 வரை பதிவு செய்த விற்ற, விற்கப்படாதஅனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும்  மனைப்பிரிவை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnlayoutreg.in என்ற தளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் என்றும், இந்த இறுதி வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது