நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டிருந்தார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் 13 ஆண்டுகளாக தன்னுடன் பள்ளியில் படித்த நபரான சுரேஷ் பர்ஹான் என்பவரை காதலிப்பதாக செய்திகள் வெளியானது.

ஆனால், இதை கீர்த்தி மறுத்துள்ளார். இந்நிலையில், இந்த வதந்தி குறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ளார் கீர்த்தியின் தந்தை சுரேஷ்குமார். பர்ஹான் எங்களது குடும்ப நண்பர். இருவரும் காதலிப்பதாக கூறுவதில் உண்மையில்லை. இந்த வதந்தி அவரது குடும்பத்தை கூட பாதிக்கும். அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் விளக்கம் கொடுத்துள்ளேன்’ என கூறியுள்ளார்.