தமிழ் சினிமாவின் இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவர் கல்லீரல் பிரச்சனையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பினார். அதன் பிறகு இவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட கடந்த 15 நாட்களாக வீட்டில் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரின் இறப்பு ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மனோபாலா இறுதியாக கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி இந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதன் பிறகு சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வந்த அவர் எந்த படத்தையும் பதிவிடவில்லை. இவர் இறுதியாக விஜையுடன் லியோ திரைப்படத்தில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.