இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருப்பவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். கடந்த வருடம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு தனி மவுசு இருக்கும் நிலையில் தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சல்மான் கானை 2 வருடங்கள் காதலித்ததாகவும் அந்த காதலால் பல்வேறு துன்பங்களை அனுபவித்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஐஸ்வர்யா ராயை சல்மான் கான் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என நினைத்ததோடு அவரைக் கேட்காமல் ஐஸ்வர்யா எந்த படத்திலும் கமிட்டாக கூடாது எனவும் கண்டிஷன் போட்டு அவரை டார்ச்சர் செய்துள்ளார். இதனால் ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் வீட்டினுள் முடங்க சல்மான்கான் அவர் வீட்டிற்கே நேரடியாக சென்று வெளுத்து வாங்கியுள்ளார். இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது. இந்த பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்த ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் ‌ செய்து கொண்ட நிலையில் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மேலும் இந்த தகவலை காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பிரபல நடிகை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.