தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட நடிகராக வலம் வருபவர் சரத்பாபு. இந்நிலையில் சரத்பாபு உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சரத்பாபு வீடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் உடல்நலக் குறைவால் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சென்ற 20ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், சரத்பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இத்தகவல் வெளியானதிலிருந்து திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சரத்பாபு பூரண குணமடைய வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.