விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் ஏதாவது தலைப்பு கொண்டு நிகழ்ச்சி விவாதிக்கப்படும் நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு தோசை ஸ்பெஷல் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது. அதில் தோசை பிரியர்கள் கலந்து கொண்டு உரையாடிய நிலையில் ஒரு கட்டத்தில் தொகுப்பாளர் கோபிநாத் மாஸ்டராக மாறி தோசை சுட ஆரம்பித்துள்ளார்.

மற்றொரு நபர் தோசை என்ற பெயர் எவ்வாறு வந்தது என்று அழகாக விளக்கம் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.