முனீஸ் ராஜூ ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியாவும் கடந்த 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் பல சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில் அதன் பிறகு இருவரும் ஒன்று சேர்ந்தனர். இதற்கிடையில் கணவரிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும் தன்னை மன்னித்து விடும்படியும் பிரியா ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.  இந்நிலையில் கல்யாணமாகாத பெண்களுக்கும், பெண்ணைப்பெற்ற தாய் தந்தையருக்கும் இது ஒரு பாடம் என தனது மகளின் வாழ்க்கை குறித்து நடிகர் ராஜ்கிரண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் முனீஸ்ராஜை விட்டு பிரிந்துவிட்டதாக ஜீனத் பிரியா அறிவித்திருந்தார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பிரியா, ‘ஏற்கெனவே திருமணமானதை முனீஸ்ராஜா தன்னிடம் மறைத்துவிட்டார் எனவும், அவரை விட்டு பிரியாவிட்டால் தான் இறந்திருப்பேன்’ என்றும் கூறியுள்ளார்