வேலையில்லாத இளைஞர்களுக்காக உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் அமைக்க மானியத்துடன் கடன் உதவிகளை மத்திய அரசு வழங்குகின்றது. இந்த திட்டத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். இந்த கடனுக்கு அரசிடம் இருந்து 35 சதவீதம் மானியம் கிடைக்கும். அதாவது 3.15 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படும். பயனாளிகள் 6.85 லட்சம் மட்டுமே செலுத்தினால் போதும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற https://pmfme.mofpi.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.