உத்திரபிரதேச மாநிலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபிரோசாபாத் நகரில் உள்ள ஹன்ஸ்வாஹினி பள்ளியில் சனிக்கிழமை மதிய உணவு நேரத்தில் அனைத்து மாணவர்களும் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது சந்திரகாந்த் என்ற 8 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தான். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சமீபகாலமாக இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.