அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடைநிலை கல்வி மூலமாக எம்பிஏ, எம் சி ஏ மற்றும் எம்எஸ்சி ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் அதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி மையம் மூலமாக முதுநிலை படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கான மாணவர் சேர்க்கை டான்செட் தேர்வு அல்லது தொலைநிலைக் கல்விக்கான நுழைவுத் தேர்வு மூலமாக நடத்தப்படும்.

அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் தொலைநிலை கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. எனவே இதற்கு விருப்பம் உள்ள மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களுடன் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நுழைவுத் தேர்வு செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.