இஸ்ரேல் நாட்டின் பொது இடங்களில் இளம்பெண்களும் ஆண்களும் சாதாரண உடையில் கையில் பெரிய ரகத் துப்பாக்கிகளுடன் உலா வருவது சுற்றுலாப் பயணிகளுக்கு வியப்பை ஏற்படுத்தினாலும், அந்நாட்டு மக்களுக்கு இது ஒரு அன்றாட நிகழ்வாகும். இதற்கு முக்கியக் காரணம் அங்குள்ள கட்டாய ராணுவச் சேவையாகும்.
18 வயது பூர்த்தியான ஆண்கள் 3 ஆண்டுகளும், பெண்கள் 2 ஆண்டுகளும் ராணுவத்தில் பணியாற்றுவது அங்கு கட்டாயம். ராணுவப் பயிற்சியின் போது அவர்களுக்கு ஆயுதங்களைக் கையாள்வதில் முழுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. விடுமுறையில் வீட்டிற்குச் செல்லும் போது, ஆயுதங்கள் திருடப்படுவதைத் தவிர்க்கவும், பாதுகாப்புக் கருதியும் அவர்கள் தங்கள் துப்பாக்கிகளை எப்போதும் தன்னுடனேயே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலில் ஆயுத கலாச்சாரம் மேலும் அதிகரித்துள்ளது. நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய துப்பாக்கி உரிமம் வழங்கும் விதிகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது.
குறிப்பாகப் பெண்களிடையே துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான ஆர்வம் பெருமளவில் அதிகரித்துள்ளது; ஆயிரக்கணக்கான பெண்கள் தற்போது தற்காப்பிற்காகத் துப்பாக்கிகளை வைத்திருக்கின்றனர்.
View this post on Instagram
“>
இது மற்றவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்காக அல்லாமல், தீவிரவாதத் தாக்குதல்கள் போன்ற அவசர காலங்களில் உடனடியாகச் செயல்பட்டுத் தங்களையும் மற்றவர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காகவே ஒரு தற்காப்பு நடவடிக்கையாகப் பின்பற்றப்படுகிறது.
