நைஜீரியா நாட்டில் உள்ள போர்னோ நகரம் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது. இந்த நாட்டில் பல காலமாக நடந்து வரும் உள்நாட்டு கிளர்ச்சியினால் சமீபத்தில் பொதுமக்கள் 25 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சில பயங்கரவாதிகள் துப்பாக்கிகளை இந்திய படி வயல்வெளிகளுக்கு சென்று பண்ணைகளை நாசம் செய்ததோடு அங்கிருந்த 10 விவசாயிகளின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.

அவர்களிடம் இருந்து உயிர் தப்பிய ஒரு விவசாயி தனது விவசாய நண்பர்கள் 10 பேரின் தலையில்லா சடலத்தை நான் பார்த்தேன் என வேதனையுடன் கூறியுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியில் போகோ ஹராம் எனும் தீவிரவாத இயக்கம் உள்ளது என்று கூறப்படுகிறது.