மதுரை மற்றும் பழனி இடையே ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரையிலிருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த இரண்டு நாட்களிலும் மதுரையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்ட காலை 8.30 மணிக்கு பழனி சென்றடையும். வரும் மார்க்கமாக பழனியில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த சிறப்பு ரயில் சோழவந்தான், கொடை ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.