தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் போன்ற பணிகளை ஆன்லைனில் மேற்கொள்ளலாம் என்றும் இனி மேல் கூட வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் உடனே சேர்க்கவும்.