பொதுத்தேர்வுகளை எதிர் கொள்ளும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று உரையாட உள்ளார். ‘பரிக்ஷா பே சிர்ச்சா’  என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

படிப்பு விஷயத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று கூறினார். அமைதியான சூழலில் தேர்வு எழுத ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் ஒரு நாளைக்கு பத்து முதல் 12 மணி நேரம் படிக்க வேண்டும் என்ற விதிகளை அமைக்க வேண்டாம் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.