சேலம் மாவட்டத்தில் உள்ள கூனாண்டியூர் மாயவன் தெருவில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் 2-வது மகள் தீபிகா அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபிகா கடந்த தேர்வுகளில் மதிப்பெண் குறைவாகவே பெற்றுள்ளார். இதனையடுத்து நடந்து முடிந்த அரையாண்டு தேர்விலும் மதிப்பெண் குறைவாக இருந்ததால் மன உளைச்சலில் இருந்த தீபிகா தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே மகள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது கிணற்றில் தீபிகாவின் செருப்பும், துப்பட்டாவும் மிகுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீபிகாவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.