நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக மீது காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியின் மீது பாஜக கட்சியும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளது. இந்த இரு புகார்களையும் பதிவு செய்து கொண்ட தேர்தல் ஆணையம் சர்ச்சை பேச்சு தொடர்பாக வருகிற 29ஆம் தேதி காலை 11 மணிக்குள் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.