தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய கொடியை பயன்படுத்திய திருவள்ளூர் பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே மெய்பூரில் கடந்த 3ஆம் தேதி பிரச்சாரம் செய்தபோது தேசிய கொடியை பயன்படுத்திதாக புகார் அளிக்கப்பட்டது.

திருவள்ளூர் தனி நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் பொன் பால கணபதி களத்திலிருந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் மெய்பூர் பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற போது, அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்பதற்காக தாமரை கொடியும், தேசிய கொடியும் கொடுத்து அவரை வரவேற்றது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோவானது வைரலானது.

இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரியபாளையம் போலீசார் பாஜக வேட்பாளர் பொன்.பால கணபதி மற்றும் மாவட்ட தலைவர் சீனிவாசன், பூண்டி ஒன்றிய தலைவர் சாந்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.