தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலையே உள்ளார். இந்தநிலையில் கடந்த நவம்பர் 18ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஐசியுவில் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு பின்னர் அவர் நலம்பெற்று சாதாரண வார்டுக்கு திரும்பியிருக்கிறார்.

ஆனாலும், ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்த உறுப்புகளை கண்காணிக்க வேண்டி இருப்பதால் மருத்துவர்களின் ஆலோசனைபடி மருத்துவமனையில் இன்னும் கண்காணிப்பில் தொடர்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது.