கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள சுருக்கெழுத்து, தட்டச்சர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்கள் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விரைந்து நிரப்பப்படும் என்றும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த ஆண்டு ரூ.16 ஆயிரத்து 500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

இந்த வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் என தெரிகிறது. எனவே வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.