தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த திட்டங்களை தான் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்றும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.