தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இந்நிலையில் அவருடைய நினைவிடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவர் ஒருவர் தான் வாங்கிய புது பைக்குடன் பிரேமலதா விஜயகாந்திடம் சென்று என்னை ஆசிர்வதியுங்கள் என கூறியுள்ளார்.

அப்போது, மாணவருக்கு ஆசி வழங்கிய பிரேமலதா, தலைக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் வாகனம் ஓட்டும்படி மாணவனுக்கு அறிவுறுத்தினார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.