மராட்டியம் மும்பையை சேர்ந்த முகமது காஷிப் இம்தியாஸ் சாயிக்(23) என்பவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. இதையடுத்து முகமது காஷிப் தன் மனைவியுடன் தேனிலவு கொண்டாடுவதற்கு மராட்டியத்திலுள்ள புகழ்பெற்ற இடமான மாதேரனுக்கு சென்று உள்ளார். இவர்களுடன் மற்றொரு தம்பதியும் தேனிலவுக்கு சென்று உள்ளனர். தேனிலவுக்கு சென்ற தம்பதிகள் மாதேரனில் பல்வேறு இடங்களையும் சுற்றிப்பார்த்தனர்.

இந்நிலையில் முகமது காஷிப் குதிரைசவாரி செய்துள்ளார். அப்போது முகமது காஷிப் சென்ற குதிரை வேகமாக ஓடியதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் முகமது காஷிப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவ்வாறு தேனிலவுக்கு சென்ற இடத்தில் குதிரையிலிருந்து தவறி விழுந்த புது மாப்பிள்ளை பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.