உத்திரபிரதேசம் கோரக்பூரில் இந்துமத வழிபாட்டு தலமான கோரக்நாத் கோயில் இருக்கிறது. இந்த வழிபாட்டு தலத்தின் தலைமை பூசாரியாக அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இந்த வழிபாட்டு தலத்தில் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி அரிவாளுடன் வந்த இளைஞர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இத்தாக்குதலில் பாதுகாப்பு பணியிலிருந்த 2 காவல்துறையினர் பலத்த காயமடைந்தனர்.

அதன்பின் தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், தாக்குதல் நடத்தியது கெமிக்கல் இன்ஜினியரான அகமது முர்தசா அப்பாஸ் ஆவார். மேலும் இவர் ஐஎஸ் பயங்கரவாதி என்பதும் அந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்த வழக்கு விசாரணையில், பயங்கரவாதி அமகது முர்தசா அப்பாசுக்கு தூக்குதண்டனை விதித்து என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.