வங்கி ஊழியர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். அதாவது, வாரத்துக்கு 2 நாட்கள் விடுமுறை, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதுகுறித்து ஜன,.30, 31 ஆம் தேதி நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என கூறி இருந்தனர். இது பற்றி மும்பையில் இந்திய வங்கி நிர்வாகிகள் உடன் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் 5 நாள் வங்கிச் சேவை மற்றும் ஓய்வூதியத்தை புதுப்பித்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மறு சீரமைப்பு செய்தல் ஆகிய கோரிக்கைகள் குறித்து நாளை 31 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் வங்கி வேலைநிறுத்தம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது