பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தேசிய கட்சியாக தங்களை வலுப்படுத்த முயற்சி செய்து வரும் ஆம் ஆத்மி கடந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்து ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் நடைபெறும் அரசியல் பற்றியும், ஆட்சி மீதான நன்மை, தீமைகள் குறித்தும் தனித்துவமான கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி அம்மாநில அரசின் அன்றாட செலவினமான தேநீர் மற்றும் சிற்றுண்டிக்கான கணக்கு பற்றி ரஜன்தீப் சிங் என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரியுள்ளார். இந்த நிலையில் சென்ற வருடம் ஜூலை 1-ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அதாவது ஒரு மாதத்திற்கு மட்டும் அம்மாநில அரசு தேநீர் மற்றும் சிற்றுண்டிக்காக 30 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளது தெரியவந்துள்ளது.