உத்தரபிரதேசம் மைன்புரி ஜாகிரின் ரத்தன்பூரை சேர்ந்த மனோஜ் மிஸ்ரா ஜனவரி 9, 2015 அன்று தன் வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவர் பார்வை இழந்தார். பின் குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனிடையே அவரது மகள் ரஞ்சனா கர்ப்பமாக இருந்தார்.

மனோஜ் மிஸ்ரா இறந்து 20 தினங்களுக்கு பின் ரஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆர்யன் என பெயரிட்டனர். இதில் ஆர்யன் தன் 4 வயதில் தனது தாயிடம் நீ என் தாய் அல்ல என அடிக்கடி கூறுவார். மேலும் மைன்புரிக்கு வந்ததும் பாட்டியை பெயர் சொல்லி கூப்பிட்டுள்ளார். இதற்கிடையில் சிறுவனின் தாய் பாட்டியின் பாதங்களை தொட்டு வணங்கும்படி  கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன் அவர் என் மனைவி, பாட்டி அல்ல என்று கூறி இருக்கிறார். அம்மாவை மகள் எனவும் அண்ணனை மகன் எனவும் அழைக்க ஆரம்பித்தார்.

சிறுவன் தன்னை 8 வருடங்களுக்கு முன் பாம்பு கடித்து இறந்த மனோஜ் மிஸ்ரா என்று கூறிக் கொண்டார். நான் தாத்தாவின் மறுபிறவி என சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் சிறுவன். அதிலும்  குறிப்பாக தன் தாத்தாவின் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் பற்றி ஆர்யன் கூறியது மக்களை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.