உத்தரபிரதேசம் நவிதாஸ் நகர் மாவட்டம் கோபிகஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் இளம்பெண் ரோஷ்னி (21). இவருக்கு முக்தார் அகமது (22) என்பவருடன் சென்ற 17-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு மறு நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ரோஷ்னிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனால் அன்று இரவே ரோஷ்னியை உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், திங்கட்கிழமை மாலை ரோஷ்னி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமணமான மறுநாள் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்ட புது மணப்பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.